கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.
இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.