கிளிநொச்சி A9 வீதியில் அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி A 9 வீதியில் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியின் வீதியோரத்திலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், விபத்தில் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.